வசந்த் பஞ்சமி | Ama Vedic Services

வசந்த் பஞ்சமி





Vasanth panchami

தை மாதத்தில் வரும் வளர் பிறை பஞ்சமி திதி அன்று வசந்த் பஞ்சமி கொண்டாடுவது வழக்கம். வசந்த் என்றால் வசந்த ருதுவைக் குறிக்கும். பஞ்சமி  என்பது வளர்பிறையின் ஐந்தாம் தினமாகும். வடஇந்தியாவில் இதை விமரிசையாக கொண்டாடுகிறார்கள்

 

வசந்த் பஞ்சமி அன்னை சரஸ்வதியின் பிறந்த தினமாகவும் கொண்டாடப்படுகிறது. வசந்த ருதுவின் ஆரம்பத்தை கொண்டாடும் வகையிலும் அமைகிறது. ஹோலி கொண்டாட்டத்தின் ஆரம்பத்தையும் குறிக்கிறது. இந்த நாளில் மக்கள் மஞ்சள் நிற ஆடை அணிந்து மஞ்சள் நிற மலர்களை இறைவனுக்கு படைத்து வசந்தத்தின் துவக்கத்தை கொண்டாடுகிறார்கள். வானில் பட்டம் செலுத்தி மகிழ்கிறார்கள்.

 

அன்னை சரஸ்வதியை கொண்டாடும் வகையில் அமைந்ததால் இந்த நாளில் சிறுவர்கள் தங்கள் படிப்பை துவங்கும் வழக்கமுண்டு. சரஸ்வதி கல்விக்கும் ஞானத்திற்கும் உண்டான கடவுள் என்பது நாம் அறிந்ததே. பிராமணர்களுக்கு உணவு அளித்தல், பித்ருக்களுக்கு தர்ப்பணம் செய்தல் போன்றவையும் இந்த நாளில் உண்டு.

 

ஶுத்தஸ்படிகரூபாயை ஸூக்ஷ்மரூபே நமோ நம: |
ஶப்தப்ரஹ்மி சதுர்ஹஸ்தே ஸர்வஸித்த்யை நமோ நம: 
||

 

 

service portfolio tag: 
Service Categories: 
Share this:
Tags:

About sudha

[field_information]
  • Website
  • Google+
  • Rss
  • Pinterest
  • Instagram
  • LinkedIn
  • Vimeo
  • Youtube
  • Flickr
  • Email

    Leave a Reply

    CAPTCHA
    This question is for testing whether or not you are a human visitor and to prevent automated spam submissions.
    2 + 3 =
    Solve this simple math problem and enter the result. E.g. for 1+3, enter 4.