கோவில் இ-சேவை மையங்களின் அவசியம் | Ama Vedic Services

கோவில் இ-சேவை மையங்களின் அவசியம்

 

இன்று எல்லாமே தொழில் நுட்பத்தின் துணை சார்ந்து செய்யப்படுகிறது. ஒவ்வொரு நாளும் தொழில் நுட்பத்தின் துணை இல்லாமல் ஒரு நிமிடம் கூட நகருவது இல்லை. இப்படி இருக்கையில் நமது கோவில் வழிபாடுகளையும் இணைய தளத்தின் மூலம் பதிவு செய்தால் நமது வேலை எளிது தானே?

 

நீங்கள் வழிபடும் தெய்வத்தின் அருள் உங்களுக்கு வீட்டிலிருந்தபடி கிடைக்க வழி உள்ளதா?

 

ஆன்லைன் கோவில் சேவை மையங்கள் இதற்கு துணை புரிகின்றன.

 

இது அவசியமா? ஏன் நான் நேரில் தரிசனம் செய்ய மாட்டேனா? நீங்கள் முனகுவது காதுகளுக்கு எட்டுகிறது.

 

நம்மில் எத்தனை பேர் கோயிலுக்கு யாத்திரை கிளம்புகிறோம்? அப்படியே கிளம்பினாலும் எதனை பேர் நினைத்த வண்ணம்  கோயிலில் தெய்வங்களுக்கு பூஜை செய்கிறோம்? பிரார்த்தனைகளை சமர்ப்பிக்கிறோம்?

 

எத்தனை இடர்பாடுகள். எந்ததொரு கோயில் திருவிழாவையும் தொலை காட்சியில் கண்டு மகிழ்வது எளிதான ஒன்றாகிவிட்டதே? அப்படி இருக்க கோயில்களில் பூஜை செய்ய எங்கு நேரம்?

 

நமக்கு நாம் விரும்பி போக எண்ணும் பல கோயில்கள் மிகுந்த தூரத்தில் உள்ளன.

 

அங்கு நமது தேவைகளை பூர்த்தி செய்ய தெரிந்தவர்கள் கிடையாது.

 

நமக்கு கிடைக்கும் கொஞ்சம் நேரத்தில் நமக்கு அருகில் இருக்கும் கோயில்களுக்கு செல்வதற்கே நம்மால் முடிவதில்லை.

 

இத்தகைய சூழ்நிலையில் நீங்கள் இணையதள வசதியோடு உங்களுக்கு இஷ்டமான தெய்வத்தின் கோயிலில் அபிஷேகம், பூஜை, பிரார்த்தனை ஆகியவற்றை உங்களுக்கு வேண்டிய நாளில் நடத்த முடிந்தால் அது விசேஷமான ஒன்றுதானே!

 

குலதெய்வம் கோயில்கள் எங்காவது தொலை தூரத்தில் இருப்பது வழக்கம். வனாந்திரங்களில் கூட இருக்கலாம். உங்கள் குலதெய்வம் கோயிலில் உங்கள் பிறந்த தினம் அன்று அல்லது திருமண  நாளன்று  உங்கள் தெய்வத்திற்கு அர்ச்சனை செய்ய  முடிந்தால் தெய்வ அருள் அதிக அளவில் கிட்டுமன்றோ?

 

உங்களுக்கு ஏதாவது தோஷமிருந்து அதற்கு பரிகாரமாக உங்கள் நக்ஷத் திரத்தன்று உரிய தெய்வத்திற்கு அர்ச்சனை செய்ய முடிந்தால் அது உங்களுக்கு நலம் பயக்குமே?

 

நீங்கள் விரும்பும் பிரார்த்தனையை நினைத்த நாளில் உரிய கோயிலில் எந்த இடர்பாடும் இன்றி நீங்கள் இருந்த இடத்திலிருந்து நடத்த முடிந்தால் அது அற்புதமான ஒன்றுதானே?

 

நீங்கள் இணையதள கோயில்  சேவைகளை பயன்படுத்தி தகுந்த மையத்தில் பதிவு செய்தால், உங்கள் விருப்பங்கள் எளிதாக நிறைவேறும்.

 

உங்கள் எண்ணம் ஈடேறும், தெய்வ அருள் கிட்டும், வாழ்வில் மங்களம் உண்டாகும்.

 

அமா வேதிக் செர்விசெஸ் இணையதளத்தின்  ஆன்லைன் கோவில் சேவைகளை உரிய முறையில் பயன்படுத்தி தெய்வ அருள் பெறுவீர்!

 

 

 

service portfolio tag: 
Service Categories: 
Tags:

    Leave a Reply

    CAPTCHA
    This question is for testing whether or not you are a human visitor and to prevent automated spam submissions.
    7 + 6 =
    Solve this simple math problem and enter the result. E.g. for 1+3, enter 4.