ஆருத்ரா தரிசனம் | Ama Vedic Services

ஆருத்ரா தரிசனம்

ஆருத்ரா தரிசனம் மார்கழி மாதத்தில் பௌர்ணமியும் திருவாதிரை நட்சத்திரமும் சேரும் நாளில் வருகிறது. இந்த நாள் சிவ பெருமானின் தாண்டவத்தைக் குறிக்கும் வண்ணம் அமைகிறது. சிதம்பரத்தின் நடராஜர் கோலம் இந்தத் தாண்டவத்தை விளக்கும் வண்ணம் உள்ளது.

 

இந்த வருடம் ஆருத்ரா தரிசனம் ஜனவரி 2ம் தேதி செவ்வாய்க் கிழமை அன்று வருகிறது.

 

சிவாலயங்களில் நடராஜ வழிபாடு

 

Arudra Dharisanam

 

ஆருத்ரா தரிசனம் அன்று சிவாலயங்களில் சிவனாருக்கு சிறப்புப்  பூஜைகளும்,அபிஷேகமும் நடைபெறும்.இன்றைய தினம், நடராஜர் சிலையை ஊர்வலத்தில் எடுத்து  வரும் போது தரிசனம் செய்வது நல்லது. சிதம்பரம் கோயிலில் ஆருத்ரா தரிசனம் வெகு சிறப்பாகக் கொண்டாடப்படும்

 

Arudra Dharisanam

 

ஆருத்ரா தரிசனம் அன்று அளிக்கப்படும் நெய்வேத்யம்

 

திருவாதிரைக் களி ஆருத்ரா தரிசனம் அன்று  சிவனுக்கு அளிக்கப்படும் நெய்வேத்யமாகும்.திருவாதிரைக் களி அரிசியும்,பாசிப்பருப்பும் கொண்டு செய்யப்படும்  இனிப்பு  உணவாகும். இந்த களிப் பிரசாதத்தை உண்டால் வாழ்வின் இன்னல்கள் அகலும் என்பது ஐதீகம்.

 

திருவாதிரை (ஆருத்ரா தரிசனம்) அன்று சிவனை தரிசித்து இன்னல் அற்ற வாழ்வு பெறுவோமாக!

 

 

மேலும் படிக்க 

 

சிவதாண்டவ மகிமை

சிறுநீரகக் கோளாறுகளை நீக்கும் சிவன்

நந்தி பகவான் பற்றிய அரிய சுவையான தகவல்கள்

 

 

 

 

service portfolio tag: 
Service Categories: 
Tags:

    Leave a Reply

    CAPTCHA
    This question is for testing whether or not you are a human visitor and to prevent automated spam submissions.
    2 + 9 =
    Solve this simple math problem and enter the result. E.g. for 1+3, enter 4.